ஏற்காட்டில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மை எரிப்பு!

பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.

அது போல சேலம் மாவட்டம், ஏற்காட்டில், அண்ணா சிலை பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாலர் பெருமாள் தலைமையில் நடைப்பெற்ற இப்போரட்டத்தில் ஹெச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் ஆட்டோ ஒன்றில் கொண்டு வரப்பட்ட ஹெச்.ராஜாவின் உருவ பொம்மை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்து. மேலும், அதன் மீது எச்சில் துப்பியும், தடியால் அடித்தும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தனர்.

பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

-நவீன்குமார்.

 

 

Leave a Reply