சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படுமா?- கறம்பக்குடி ஒன்றியம், முல்லங்குரிச்சி மக்கள் புலம்பல்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், முல்லங்குரிச்சி தெற்கு, கடுக்காக்காடு, ஆதி திராவிடர் குடியிருப்பில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையில், பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியும் அந்த பாலம் இன்னும் சரி செய்யப்படவில்லை.

சாலையின் நடுவில் பள்ளம் உள்ளதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கே அஞ்சுகின்றனர். இதுக்குறித்து பல முறை புகார் அளித்தும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போர்கால அடிப்படையில் பாலத்தை சரிசெய்யவில்லையென்றால், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தராஜ்.

 

 

Leave a Reply