நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த மதிமுக தொண்டர்!-மருத்துவ மனையில் கண்ணீருடன் நின்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!-வீடியோ.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து கம்பம் வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மதுரை பொதுக்கூட்டத்தில், மதிமுக தொண்டர் ரவி என்பவர் இன்று தீக்குளித்தார்.

இந்த தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்து பதறிய வைகோ, கண்ணீர் விட்டு கதறினார். தீக்குளித்த ரவி மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற வைகோ, தீக்குளித்த தொண்டரைப் பார்த்து கண்ணீருடன் பேசிய உரையாடல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சரி, நியூட்ரினோ திட்டத்தைப்பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்ன சொல்கிறார்?-இதோ நீங்களும் கேளுங்களேன்…!

-எஸ்.திவ்யா.

Leave a Reply