செங்கம் ரெட்கிராஸ் சார்பில் உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், இந்தியன் ரெட்கிராஸ் கிளை சார்பில் உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்காக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

பஸ் நிலையம், தாலுக்கா அலுவலகம், நீதிமன்ற வளாகங்கள், கடைவீதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மது மதியை கெடுக்கும், மீளா துன்பம் தரும், உடல் நலத்தை கெடுக்கும், சுய கௌரவம், மரியாதை, புகழ், நேர்மை அனைத்தையும் கெடுக்கும், நிரந்தர அடிமையாக்கும், உடல் நலத்தை அழிக்கும், எனவே மனக்கட்டுபாடுடன் மதுவை ஒழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ரெட்கிராஸ் சார்பில் வழங்கப்பட்டது.

– செங்கம் சரவணக்குமார்.

Leave a Reply