ஏற்காடு மலைப்பாதையில் பஸ் மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது.

சேலம் மாவட்டம்,  ஏற்காடு மலைப்பாதையில் ஆம்னி வேன் அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருநெல்வேலியை சேர்ந்த சையது முகைதின், முகைதின் முக்தா, பழனியப்பன் ஆகியோர் சேலத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவதற்காக அப்பகுதியை சேர்ந்த முரளி மகன் குமரேசன்(23), என்பவரது ஆம்னி வேனில் ஏற்காடு நோக்கி வந்துள்ளனர். ஆம்னி வேனை முரளி ஓட்டியுள்ளார்.

இவர்கள் ஏற்காடு மலைப்பாதையின் 40 அடி பாலம் அருகே வந்துக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த அரசு பேருந்தில் மோதியுள்ளனர். இதில் முரளியின் காலில் காயம் ஏற்பட்டு அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். சாலையின் வலது புறம் பயணித்து பஸ்சில் மோதியதால், ஏற்காடு காவல் துறையினர் ஆம்னி கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

– நவின் குமார்.

 

Leave a Reply