அரசு மது பான குடோன் முன்பு சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள அரசு மது பான குடோனில் வேலை செய்யும் சுமைத் தூக்கும் தொழிலாளர்களுக்கும், அரசு மது பான குடோன் மேலாளருக்கும், கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை எடுத்துச் சென்றதாக கூறி, சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, கடந்த வாரம் பெண்கள் தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

இந்நிலையில், அரசு மது பான குடோன் முன்பு சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் குடும்ப பெண்கள் இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தை ஆட்டி படைத்து வரும் டாஸ்மாக் நிர்வாகம், நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகளால் ஆட்டம் கண்டு வருகிறது.

 

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply