இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மான்போர்ட் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்!

கடந்த 20-ம் தேதி இமாச்சல பிரதேசம் குலு மணாலிக்கு, திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளியின் 31 மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 40 பேர் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா சென்ற திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் என்ன ஆனார்களோ? என்ற பதட்டம் தமிழகத்தை உலுக்கியது.

இந்நிலையில், திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளியின் 31 மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

எனவே, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அச்சப்பட தேவையில்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply