திருச்சி தேசியக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி!

திருச்சி, தேசியக் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள், என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் ராமர் தலைமையில், கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டது. கல்லூரி மேலாண்மை, முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோரிடம் ரூ. 90,650 நிதி திரட்டப்பட்டது.

அந்த தொகைக்கான வங்கி பணவிடையை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் மற்றும் சில கல்லூரி பேராசிரியர்கள் சென்று 04.10.2018 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் சமர்ப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் கல்லூரியின் சமூக சேவையைப் பாராட்டினார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply