திருச்சி சர்க்கார்பாளையம் அருகே கொத்தனார் கழுத்தறுத்து படுகொலை!

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவிரியின் வலது கரையில் திருச்சி-கல்லணை சாலையில் அமைந்துள்ள சர்க்கார்பாளையம் அருகேயுள்ள பனையகுறிச்சி, மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், இவரது மகன் ரதீஷ்(35) இவர் கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், காமேஷ், நாகாத் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணிவரை வீட்டில் இருந்தவர் அதன் பிறகு கீர்த்தனாவிடம் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி ரதீஷ்  சென்றுள்ளார்.  அதன்பிறகு ரதீஷ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், காலையில் பனையகுறிச்சியில் உள்ள ரேசன் கடைக்கும், அங்கன் வாடி மையத்திற்கும் இடையே மதுபாட்டிலால் கழுத்தறுக்கபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக ரதீஷ் கடந்துள்ளார்.

அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் ரதீஷின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரதீஷை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ரதீஷ் எதற்காக, நள்ளிரவு ஒரு மணிக்குமேல் வீட்டை விட்டு வந்தார்? அவரை அழைத்தது யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

ரதீஷ் அந்தப்பகுதியில் நின்ற டயர் வண்டி அடியில்தான் கழுத்தருக்கபட்டிருக்கவேண்டும். அங்கு ரத்தம் சொட்டியுள்ளது. பின்னா கொலைகாரர்களிடமிருந்து ரதீஷ் தப்பிக்க நினைத்து ஓடி வந்தள்ளார். ஓடிவரும் போது வழியில் ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால், ரதீஷால் தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கபட்டு ரதீஷ் உடலில் மோப்பம் பிடித்து சம்பவ இடத்தில் இருந்து ரதீஷ் வீட்டிற்கே போய் நின்றது. இது குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply