தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு அஞ்சல் தலை!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ‘தங்கப்பதக்கம்’ வென்ற, திருச்சி முடி கண்டம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழக தடகள வீராங்கனை கோமதியை கௌரவிக்கும் வகையில், அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் ஆகியோர், இந்திய அஞ்சல் துறை  மூலம் அஞ்சல் தலை அச்சிட்டு வழங்கினார்கள்.

அந்த அஞ்சல் தலையில் கோமதி தங்கப்பதக்கத்துடனும்,  செங்கோட்டை புகைப்படமும் உள்ளது. அஞ்சல் தலையினை திருச்சி முடி கண்டம் கிராமத்தில் உள்ள  கோமதி இல்லத்திற்கு நேரில் சென்று, தடகள வீராங்கனை கோமதியிடம் வழங்கினார்கள்.

-துரை திரவியம்.

 

Leave a Reply