மாடு மேய்த்து கொண்டிருந்த அக்கா, தம்பியை கொலை செய்த குடிகாரன்!-ஏற்காட்டில் நடந்த இரட்டை கொலை!

சேலம் மாவட்டம், ஏற்காடு, தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்த பெரியகவுண்டர் மகன் பெரியான் (வயது 65) இவர் கிராமத்தை ஒட்டிய இளவங்கல் எனும் வனப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார். அங்கு அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (வயது 25) என்பவர் மது போதையில் வந்துள்ளார்.

அப்போது சரவணனுக்கும், பெரியானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு பெரிதாகியுள்ளது. பின்னர் சரவணன் பெரியானின் பின் மன்டையில் கல்லால் தாக்கியுள்ளான். அதில் அவரது மூளை வெளியாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெரியானை உடனே அருகில் இருந்த புதருக்குள் இழுத்து சென்று சரவணன் மறைத்துள்ளான். 

அப்பகுதியில் இருந்து, இதை கண்ட பெரியானின் அக்கா வெள்ளையம்மாள் சத்தமிட்டு கத்தியுள்ளார், உடனே சரவணன் வெள்ளையம்மாளையும் கீழே தள்ளி கல் ஒன்றை, அவரது  தலையில் போட்டு கொலை செய்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

மாலை வரை வீடு வராத பெரியானை தேடி அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி, பெரியான் மற்றும் வெள்ளையம்மாளின் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரூரல் டி.எஸ்.பி. சங்கரநாராயணன் அப்பகுதியில் விசாரித்ததில், சரவணன் மதுபோதையில் அங்கு திரிந்து வந்தது தெரிந்து, சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சரவணன் கால் மற்றும் உடைகளில் ரத்தம் இருந்தது கண்டுள்ளனர். 

அவனை பிடித்து விசாரித்ததில், “ஏன் மது அருந்தி வெட்டியாக சுற்றுகிறாய்” என கேட்டதால் பெரியான் மற்றும் வெள்ளயைம்மாளை கொலை செய்ததை ஒத்து கொண்டான். போலீசார் அவனை கைது செய்தனர். பெரியான் மற்றும் வெள்ளையம்மாள் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சரவணன் மதுபோதையில் உள்ளதால், தெளிவான பின்னர் விசாரனை மேற்கொண்டால் முழு தகவல் வெளிவரும் என ரூரல் டி.எஸ்.பி. சங்கரநாரயணன் தெரிவித்தார்.

-நே.நவீன் குமார்.

 

Leave a Reply