ஏற்கெனவே இரண்டு கொலை செய்துள்ளேன்: இரட்டை கொலை வழக்கில் கைதான இரக்கமில்லா அரக்கன் பகீர்  வாக்கு மூலம்.  

கொலையாளி சரவணன்

ஏற்காடு இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபர் சரவணன், தான் ஏற்கெனவே இரண்டு கொலை செய்துள்ளதாக வாக்கு மூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு, தெப்பக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த பெரியான் மற்றும் வெள்ளையம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலைகளை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று ஏற்காடு போலீசார் மேற்கொண்ட விசாரனையில், மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியானிடம் மது அருந்த பணம் கேட்டதாகவும், அவர் தராததால், அவரை கொலை செய்ததாகவும், மேலும், இதை கண்ட அவரது அக்கா வெள்ளையம்மாளை கொலை செய்ததாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்.

மேலும், ஏற்கெனவே கடந்த 2009 ஆம் ஆண்டு தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மற்றும் சரவணன் ஆகிய இருவருடன் சேர்ந்து, வேலை தேடி திருவாரூர் சென்றதாகவும், அங்கு கொலையாளி சரவணனுக்கும் உடன் சென்ற சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டதால் சரவணனை கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஆற்றில் அவனது பிரேதத்தை போட்டதாகவும். பின்னர் ஜெயபால் மற்றும் கொலையாளி சரவணன் ஏற்காடு திரும்பிவிட்டனர்.

சரவணனை நீதான் கொலை செய்தாயா? என கொலையாளி சரவணனிடம் ஜெயபால் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபாலை கடந்த 2011 ஆம் ஆண்டு சரவணன் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில், கொலையாளி சரவணன் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

 -நே.நவீன் குமார்,

 

Leave a Reply