விபத்தில் லாரிக்குள் சிக்கி கொண்ட டிரைவரை தீயணைப்புத்துறையினர் மூலம் பத்திரமாக மீட்ட போலீசார்!

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்து பின்னால்பெரம்பலூரில் இருந்து வல்லத்திற்கு கோழி ஏற்றி வந்த லாரி மோதியதில், லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. லாரி டிரைவர் ஜாகீர் உசேன் (45) லாரிக்குள் சிக்கி கொண்டார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார், உடனடியாக  நவல்பட்டு மற்றும் பெல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், லாரியில் சிக்கி கொண்ட ஜாகீர் உசேனை  லாரியின் சில பாகங்களை கட்டர் வைத்து வெட்டி எடுத்து பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக சிறு, சிறு காயத்துடன் ஜாகீர் உசேன் தப்பினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.சிராசுதீன்.

 

 

 

Leave a Reply