திருச்சி இனாம்குளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

திருச்சி மணப்பாறை செல்லும் சாலையில் இனாம்குளத்தூர் இந்தியன் ஆயில் கார்பரேசன் கேஸ் குடோன் அருகில் இன்று 21-05-2019 மாலை சுமார் 04.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சு வரதாமதம் ஆனதால், தனியார் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயம் அடைந்த நபர் திருச்சி ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

கே.பி.சுகுமார்.

Leave a Reply