திருச்சி புத்தாபுரம் அருகே விறகு ஏற்றி வந்த வேன் வீட்டை நோக்கி பாய்ந்தது!

திருச்சி- கல்லணை சாலையில் சர்க்கார்பாளையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் புத்தாபுரம் என்ற கிராமம் உள்ளது.

இங்கு இன்று (25.05.2019) மதியம் 1.30 மணியளவில் கல்லணை பகுதியிலிருந்து திருச்சி நோக்கி விறகு ஏற்றி வந்த வேன் ஒன்று, அதிக பாரம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புத்தாபுரம் சாலையோரம் இருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆண்டி வேலன் என்பவரின் வீட்டை நோக்கி பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆண்டி வேலன் வீட்டை ஒட்டியே டீ கடையும் இருக்கிறது. காலை நேரத்தில் இதுபோன்ற விபத்து நடந்து இருந்தால் நிச்சயம் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

-துரை திரவியம்.
படங்கள்: தினேஷ்.

Leave a Reply