குடிநீர் தட்டுப்பாடு!-மருங்காபுரி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தொட்டியப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் வெறுப்படைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் ,சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்களிடம் இனி தட்டுபாடு இன்றி  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-ஆரிய இராமன்.

Leave a Reply