மரக்கன்றுகளை நட்ட சென்னை மாநகர காவல்துறையினர்!  

உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தையொட்டி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் நடைப்பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

காவல் துறையினரின் இத்தகைய புனித பணி உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

மரக்கன்றுகளை நடுவதில் இருக்கும் ஆர்வத்தைப் போன்று, நட்ட மரங்களுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டால் மட்டுமே கொண்ட நோக்கம் முழுமையடையும். இப்பணியில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வாளர்கள் தன் முனைப்புடன் ஈடுப்பட வேண்டும். அப்போதுதான் இப்பணி முழுமையாக வெற்றியடையும்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply