ஏற்காடு மலைப்பாதையில் கார் தலை குப்புற கவிழ்ந்தது!

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மருத்துவர் நீலமேகம், இவரது மனைவி ரூத் மேரி, (வயது 55), போட்டுக்காடு அரசினர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். 

இவர்களது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்கள் அபிஷேக், சந்தோஷ், குமார் ஆகியோருடன் சேர்ந்து ரூத்ரஜினி என்பவரும் சேலத்திற்கு காரில் சென்றனர். காரை அபிஷேக் என்பவர் ஓட்டினார். 

இவர்கள் மலையடிவாரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஆமையை புரட்டிபோட்டதை போல தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ரூத்ரஜினி என்பவருக்கு மட்டும் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

-நே.நவீன் குமார்.

Leave a Reply