செங்கம் பெருமாள் திருக்கோயில் ராஜ கோபுரம் மீது இடி, மின்னல் தாக்கியது!

திருவண்ணாமலை மாவட்டம்; செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக செங்கம் ஸ்ரீ பாரத்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் கம்பீரமாக காட்சியளித்த ராஜ கோபுரம் மீது இடி, மின்னல் தாக்கியது. இதில் ராஜகோபுரத்தின் வலது பக்க சிங்கமுக வடிவம் சிதலமடைந்தது. இதனால் செங்கம் நகர பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் முயற்சியில் பரிகார பூஜை நடைபெற்றது.

-செங்கம் சரவணக்குமார்.

                      

Leave a Reply