காலத்தால் அழியாத கருப்புத் தங்கம்!

அறவழியில் அரசியலை தொடர்ந்து
ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் பல தந்து
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து
ஈன்ற தாயைவிட மேலாக தமிழக மக்களை காத்து
உண்மையான பொற்கால ஆட்சியை  தமிழகத்திற்கு அளித்து
ஊரகம் முதல் உலகம் வரை தமிழ் வளர்த்து
எட்டு திசையெங்கும் கல்வி சாலைகளை அமைத்து
ஏழைகளின் பங்காளனாய் இறுதிவரை வாழ்ந்து
ஐயம் தெளிவுற  ஒன்பது ஆண்டுகள்  ஆட்சி புரிந்து
ஒருமைபாட்டின் ஒட்டுமொத்த உருவமாக இருந்து
ஓலமிட்ட ஊழல் ஓநாய்களின் விமர்சனங்ளை ஒதுக்கி வைத்து
ஒளவையின் தர்மநெறியை உயிராக மதித்து
அஃதே என் வழியென்று அறிவு ஆயுதமாய் அவதரித்து
கல்வி கண் திறந்த காவிய தலைவனே!
காலத்தால் அழியாத கருப்புத் தங்கமே!
இந்திய ஒருமைப்பாட்டின் அங்கமே!
தமிழக மக்களின் தாரக மந்திரமே!
சிவகாமி பெற்றெடுத்த தென்னாட்டு சிங்கமே!
மறுபடியும் நீ அவதரிப்பாய் என்ற நம்பிக்கையில்
நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்….!
அதுவரை எங்கள் இதய சிம்மாசனத்தில் நீ வீற்றிருப்பாய்..!

என்றும் தோழமையுடன்,

 டாக்டர்.துரைபெஞ்சமின், BAMS., M.A.,SOCIOLOGY.,

Ex. Honorary A.W.Officer, Govt Of India.

Editor and Publisher

www.ullatchithagaval.com

Mobile No.98424 14040.

E-mail : ullatchithagaval@gmail.com

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [117.16 KB]

Leave a Reply