தென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டம்! – தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டார்.

  

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார். இரண்டு மாவட்டங்களுக்கும் தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கபடுவர் எனவும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் கேபழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 32 மாவட்டங்களையும் சேர்த்து, தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply