திருச்சி NIT – ல் 15-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் நடந்த 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் 39 மாணவர்கள் தங்க பதக்கம் பெற்றது உட்பட ஆயிரத்து 721 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

திருச்சி, திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள என்ஐடி – ல்  நடந்த 15 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு என்ஐடி இயக்குனர்  மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.

சிங்கப்பூர் நான்யாங் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத் தலைவர் சுபரா சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளங்கலை மாணவர்கள் 11 பேரும் முதுகலை மாணவர்கள் 28 பேர் உள்பட 39 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தோடு பட்டங்களை வழங்கியதோடு மேலும் இவர்கள் உட்பட ஆயிரத்து 721 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்.

இதில் இளங்கலைப் பிரிவில் 863 மாணவ மாணவிகளும், முதுகலைப் பிரிவில் 760 பேரும், டாக்டரேட் (பிஹெச்டி) 98 பேரும் பட்டம் பெற்றனர்.

இந்த விழாவில் என்ஐடி பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

– ஆர்.சிராசுதீன்.

Leave a Reply