திருச்சி-கல்லணை சாலையில் காந்திபுரத்தில் நள்ளிரவில் குடிசை தீப்பற்றி எரிந்தது!


திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் வட்டம். கீழமுல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் வசிக்கும் லெட்சுமி. சிங்கராயர் என்பவர்களின் குடிசை இன்று (28.07.2019) நள்ளிரவு 12:15 மணியளவில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைப்பதற்கு முயற்சித்தனர்.  அருகில் தண்ணீர் வசதி இல்லாததால் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மள மளவென பரவி குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. குடிசையில் இருந்த தீப்பொறி எதிரில் இருந்த புளிய மரத்தின் உச்சியில் பட்டு எரிந்தது. அதற்குள் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். இத் தீ விபத்தில் குடிசைக்குள் இருந்த அனைத்துப் பொருட்களும் சேதமடைந்தன.

தகவலறிந்த நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு தீ விபத்து குறித்து கீழ முல்லக்குடி கிராம நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு சேத விபரங்களை உடனே வருவாய் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நிவாரணம் வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

-துரை திரவியம்

Leave a Reply