சேத்துப்பட்டு அருகே ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரிய கொழப்பலூர் கிராமத்தில் அருள்மிகு சர்வசக்தி விநாயகர் ஆலயத்தில், புதியதாக அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அஷ்டப்பந்தன மஹா கும்பாபிஷேகம் 29.07.2019 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால பூஜை, 2 ஆம் கால பூஜை, கோ பூஜை, பீம்ப சுத்தி பூஜை, 3 ஆம் கால பூஜை, தம்பதி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், வந்தவாசி மாம்பட்டு மாரியம்மன் சர்வ மங்கள காளி சக்தி பீடம் லட்சுமணன் சாமி தலைமையில், 20 அடி உயர ஜெய வீர ஆஞ்சநேயர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

                        .கன்னியப்பன்.

Leave a Reply