ஏ.டி.எம். அறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்து காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த காவலர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 29.07.2019-அன்று பழனி சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர் பிரகாஷ்  ஏ.டி.எம்ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். அறையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய்.15¸000/- த்தை கண்டதும் அதனை எடுத்து அருகில் உள்ளவர்களிடம் பணத்தைப் பற்றி விசாரித்துள்ளார். பணத்திற்கு யாரும் உரிமை கோராததால்,  தவறவிட்ட பணத்தைத் தேடி யாரேனும் வந்தால் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு, பணத்தை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய  உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். காவலரின் இச்செயலை காவல் ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.

 -எஸ்.திவ்யா.

Leave a Reply