திருச்சி செந்தணீர்புரம் அருகே இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் நிலைத் தடுமாறி கீழே விழுந்தனர்!

 

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 12.15 மணியளவில், திருச்சி செந்தணீர்புரம் அருகே ஒரே இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சுமார் 18 வயது மதிக்க தக்க மூன்று இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து நிலைத் தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அதில் ஒரு இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .

இதுகுறித்து உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்ததின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களும் திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com.

One Response

  1. MANIMARAN August 16, 2019 11:23 pm

Leave a Reply