தெலங்கானா மாநில ஆளுநராக மருத்துவர் தமிழிசை சௌந்தராஜன் நியமனம் !

தமிழக பா.ஜ.க தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தராஜன்  தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறபித்துள்ளார்.

மேலும், அந்த உத்தரவில் கீழ்க்காணும் மாற்றங்களை செய்துள்ளார்.

ஹிமாச்சல் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயாவயும், மஹாராஷ்டிரா ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரியும், கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான்யும், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘இது தமிழிசைக்கு கிடைத்த அங்கீகாரமல்ல; ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை தமிழக மக்கள்  கருதுகின்றனர்’.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN September 1, 2019 11:21 pm

Leave a Reply