இடைத்தேர்தல் எதிரொலி!- தொகுதி மக்களுக்கு தீபாவளி!- வேட்பாளர்களுக்கு தலைவலி.

திமுக தலைமையிலான கூட்டணி சார்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக-வும், நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகளுடன் கலந்து பேசிய பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வேட்பாளர் நேர்காணலுக்கான அழைப்பை அதிமுக அதிரடியாக வெளியிட்டுள்ளது.

எது எப்படியோ, விக்கிரவாண்டி, நாங்குநேரி  மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் தொகுதி மக்கள் உண்மையிலுமே கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், இடைத்தேர்தல் காரணமாக இந்த வருட தீபாவளி அவர்களுக்கு மிக சுபிட்சமாக இருக்கும்.

மொத்தத்தில், தொகுதி மக்களுக்கு தீபாவளியாகவும், வேட்பாளர்களுக்கு தலைவலியாகவும் இந்த இடைத்தேர்தல்கள் இருக்கும்.

பாவம்! இந்திய தேர்தல் ஆணையம்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply