சுவற்றில் துளைப்போட்டு அதிகாலை நேரத்தில் நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்!-திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்தது என்ன!-சிசிடிவி பதிவுகள் விபரம்.

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரி  மேல்நிலைப்பள்ளி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த  பிரபல “லலிதா ஜுவல்லரி” நகை கடையின் பின் பக்க சுவற்றில் துளைப்போட்டு உள்ளே சென்று, இன்று (02.10.2019) அதிகாலை நேரத்தில் நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் கை ரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன், கொள்ளை நடந்த இடத்தை உடனே ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் அள்ளிச் சென்ற நகைகளின் மதிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், இன்று காலை முதலே நகைகளின் மதிப்பு குறித்து  அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் அவர்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கணக்கிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் பிடிப்பட்டால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmailcom.

One Response

  1. MANIMARAN October 2, 2019 5:07 pm

Leave a Reply