திருச்சி ஒட்டக்குடி அருகே காவிரி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி,  ஒட்டக்குடி அருகே காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று  கிடப்பதாக திருவெறும்பூர் போலிசாருக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார், பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்று நீரில் கிடந்ததால் உடல் உப்பி அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகம் விகாரமாக இருந்தது. பிணமாக கிடந்த இந்த  நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN October 20, 2019 6:54 pm

Leave a Reply