ஏற்காடு மலைப் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

சேலத்தில் இருந்து கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடிபாலம் அருகில் நேற்று காலை 11:00 மணிக்கு மரம் முறிந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு மரத்தை அப்புறப்படுத்தினர். சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். இதனால் மலைப் பாதையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN October 27, 2019 2:11 am

Leave a Reply