ஏழ்மையிலும் நேர்மை!-விபத்தில் சிக்கியவரின் பணம், செல்போன் மற்றும் 6 பவுண் தங்க செயின் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே 16.10.2019-ம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்ற திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கு விபத்து ஏற்பட்டு சிறு காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது அவ்வழியாக வந்த கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவரது மனைவி பாண்டியம்மாள் அவ்விடத்திலிருந்து 6 பவுண் தங்க செயின், செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கண்டெடுத்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவர்களின் நேர்மையையும், கடமை உணர்வையும் பாராட்டி 17.10.2019-ம் தேதியன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழும், பண வெகுமதியும் வழங்கி கௌவுரவித்தார்.

மேலும், பணப்பையை தவறவிட்ட திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமியை நேரில் அழைத்து பணப்பையை ஒப்படைத்தனர்.

-திவாஹர்.

 

One Response

  1. MANIMARAN November 2, 2019 7:52 am

Leave a Reply