திருச்சி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக ஊழியர் பலி!

திருச்சி அருகே உள்ள செம்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சுரேஷ் வயது 40, இவர் இன்று காலை திருச்சியிலிருந்து மண்டையூருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது, திருப்பத்தூரில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியதில், சுரேஷ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தூக்கி வீசப்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு காவல் நிலைய போலிசார், விபத்தில் பலியான சுரேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் மோதிய திருப்பத்தூரை சேர்ந்த கார் ஓட்டுனர் ஷாகுல் ஹமீத் கைது செய்யப்பட்டார்.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN November 2, 2019 6:28 pm

Leave a Reply