இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதாவிற்கு 72-வது பிறந்த நாள் திருச்சியில் நடைபெற்றது

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா “அம்மா மக்கள் முன்னேற்ற சங்கம்” சார்பாக இன்று காலை 11.00 மணியளவில் திருச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர்.துரைபெஞ்சமின் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பி.சுகுமார், துணைத்தலைவர் எஸ்.ராஜாராம், திருச்சி மாநகர மகளிர் அணி பொறுப்பாளர் வசந்தி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ஜி.லோகேஷ்வரன், ஏ.மல்லிகா, சே.தனம், டி.பானுபிரியா மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏழை பெண்களுக்கு சங்கத்தின் சார்பில் சேலை வழங்கப்பட்டது.

“அம்மா மக்கள் முன்னேற்ற சங்கம்” ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதன் முதலில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரே அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

– எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN February 24, 2020 4:48 pm

Leave a Reply