கான்கிரீட் ரெடிமிக்ஸ் லாரி  கவிழ்ந்து ஒருவர் பலி!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், கான்கிரீட் ரெடிமிக்ஸ் லாரி கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். ஏற்காடு மலைக்கிராமங்களில்  சாலையை அகலப்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கான்கிரீட் ரெடிமிக்ஸ் லாரி ஒன்று, மஞ்சக்குட்டை பகுதியில் நேற்று மதியம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்தி விபத்தில் லாரியில் சென்ற தேனி, போடியை சேர்ந்த பெரியசாமி மகன் கணேசன் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரியை ஓட்டிய இருதயசாமி மகன் சூர்யா (வயது 23), ராமர் மகன் ராம் குமார் (வயது 26) மற்றும் பாண்டியன் மகன் பிரகாஷ் (வயது24) ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


-நே.நவீன் குமார்.

Leave a Reply