மிக்க அவசரம்!-இந்த முதியவரை அவரது உறவினர்களிடம் கொண்டு போய் சேர்பதற்கு உதவுங்கள்..!

திருச்சி- கல்லணை செல்லும் சாலையில் புத்தாபுரம் அருகே, காவிரி கரை முதல் பாப்பாக்குறிச்சி செல்லும் சாலையில், வயல்வெளியில் உள்ள மர அறுவை மில் அருகே, 75 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் பசியால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த இளைஞர்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கியுள்ளனர். பசி மற்றும் முதுமையின் காரணமாக அவர் மிகவும் சோர்வாக உள்ளார்.

அவர் பெயர் சின்னப்பன் என்றும், திண்டுக்கல் மாவட்டம்,மேற்கு தாலுகா, தர்மத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்.

இது குறித்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.

எனவே, இந்த முதியவரை அவரது உறவினர்களிடம் கொண்டு போய் சேர்பதற்கு நமது வாசகர்கள் முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள். ஏனென்றால், மருத்துவ உதவியை விட, உறவினர்களின் அரவணைப்புதான் இந்த முதியவருக்கு அவசியம் தேவை.

டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN March 6, 2020 4:44 pm

Leave a Reply