திருச்சி பிருந்தாவன் வித்யாலயா சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

 

திருச்சி, திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் வித்யாலயா சர்வதேச பள்ளியில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10.15 மணி வரை  ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இதில் பேராசிரியர் முனைவர் ஆர்.வெங்கடராமன், குழந்தைகள் நல மருத்துவர் டி.ஆர்.ஆர்.கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பள்ளியின் முதல்வர் சாத்தப்பன் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறந்த மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகளின் நடனம் , நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசபபடுத்தியது.

-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

 

Leave a Reply