திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூரில் 25 வயது இளைஞருக்கு “கொரோனா வைரஸ்” தொற்று!-அப்பகுதி அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேல் ராஜ் .

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு காட்டூர், காந்தி சாலையில் உள்ள ஜாபீர் உசேன் (வயது 25) என்பவருக்கு “கொரேனா வைரஸ்” தொற்று இருப்பதாக வந்த தகவலையடுத்து, இன்று (09.04.2020) மதியம் 12 மணி அளவில் பாப்பா குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் ஞானவேல் ராஜ் மற்றும் திருவெறும்பூர் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், “கொரேனா வைரஸ்” தொற்று இருப்பதாக கூறப்படும் அந்த இளைஞரையும், அவரது தாய், தந்தை ஆகியோரையும், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் காவல் துறையினர் களமிறங்கி அப்பகுதி முழுவதும் “கிருமிநாசினி” தெளித்தனர். தற்போது அப்பகுதி அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply