காவல்துறையினருக்கு “கொரோனா” பரிசோதனை!

காவல்துறையினரின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு “கொரோனா” பரிசோதனை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலைய காவல் துறையினருக்கு “கொரோனா” பரிசோதனைக்காக மாதிரிகள் இன்று எடுக்கப்பட்டன.

ஏற்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் 21 ஆண் மற்றும் 2 பெண் காவலர்களிடமிருந்து, ஏற்காடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சளி மாதிரிகளை சேகரித்தனர். இந்த மாதிரிகள் “கொரோனா” பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, இரு நாட்களுக்கு பின்னர் முடிவுகள் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட உள்ளது.

-நே.நவீன் குமார்.

Leave a Reply