குடிபோதையில் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதி!-திருச்சி துவாக்குடி அருகே நடந்த விபரீதம்.


திருச்சி  மாவட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா வளைவு வடக்கு அக்பர் சாலை ஐசக் கட்டிடம் வாடகை வீட்டில் வசித்து வரும் இன்னாசி என்பவரின் மகன் ஜான் (வயது 29) என்பவர் இன்று மாலை 5 மணியளவில் குடிபோதையில் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துவாக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

குடிபோதையில் கீழே விழுந்த ஜான் என்பவர் பெல் நிறுவனத்தில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN May 19, 2020 8:19 am

Leave a Reply