‘உள்ளாட்சித்தகவல்’ செய்தி எதிரொலி!- குளத்து நீரை வெளியேற்றி சட்ட விரோதமாக மீன் பிடிக்கத் தடை.

குளத்து நீரை வெளியேற்றி சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் நபர்கள்!-திருச்சி மாநகராட்சி கொக்கரசம் பேட்டையில் நடக்கும் அநியாயம்!-என்ற தலைப்பில் 19.05.2020 அன்று இரவு 7.46 மணிக்கு நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் ஆதாரப்பூர்வமாக ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், குளத்து நீரை வெளியேற்றி சட்ட விரோதமாக மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்ற அறிவிப்பு பலகையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அங்கு அமைத்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2020/05/19/47978/

 

 

Leave a Reply