மனைவி பிரிந்து இருந்ததால் மன உளைச்சலில் கணவர் தூக்குமாட்டி தற்கொலை! -திருவெறும்பூர் அருகே காட்டூரில் நடந்த விபரீதம்.

கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி அவரது அம்மா வீட்டில் தங்கி இருந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த கணவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு காட்டூர், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த விக்னேஷ், வயது 27, த/பெ குருமூர்த்தி என்பவர், மனைவி தீபாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாயார் பானுமதியுடன் வசித்து வந்துள்ளார். தாயார் பானுமதி காட்டூர் அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று (24.05.2020) மாலை 05.30 மணிக்கு வேலைக்கு சென்றபோது தனது மகன் விக்னேசை உயிருடன் பார்த்து சென்ற பானுமதி, வேலை முடித்து இன்று காலை வீடு வந்து பார்த்தபோது விக்னேஷ் மனைவியின் புடவையில் தூக்குபோட்டு தொங்கியுள்ளார்.

உடனே, காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலிசார், உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விக்னேஷ்- தீபா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN May 25, 2020 5:18 pm

Leave a Reply