தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்த இளைஞர்!-திருச்சி, திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த விஷமத்தனம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே, இன்று (ஜூன்-1) காலை 6 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு கம்பியில் கட்டி வைத்து, எதற்காக இந்த போராட்டம் என்பதை விளக்கி 7 நிமிடம் 43 வினாடி முகநூல் (Face book ) பக்க வீடியோவில் நேரலையாக (Live) பேசி, அதன் பிறகு நெடுஞ்சாலையின் தடுப்பு கம்பியில் கட்டி வைத்து இருந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மை முழுவதுமாக எரியும்வரை அங்கேயே காத்திருந்து, அது எரிந்து முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில்தான் திருவெறும்பூர் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையம், திருவெறும்பூர் போக்குவரத்து காவல் நிலையம், திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையம் மற்றும் திருவெறும்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அனைத்தும் இருக்கிறது!- இத்தனை இருந்தும் என்ன பயன்?

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply