தென் மண்டல ஐ.ஜி.,யாக முருகன்!- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம்! -உத்தரவின் உண்மை நகல்.

Dr.S.MURUGAN IPS

தென் மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சண்முக ராஜேஷ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அந்த பதவிக்கு பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply