திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆய்வு.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (07.08.2020) ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.31.04 கோடி மதிப்பிலான 19 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனும், திருநெல்வேலி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுடனும், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

-அ .தியாகராஜன்.

Leave a Reply