பெற்றோர் கண்டித்ததால் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை, உறவினரிடம் ஒப்படைத்த ஏற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்!

சேலம் மாவட்டம், ஏற்காடு, கூத்துமுத்தல் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் – சரசு தம்பதியின் மகன் சரத்குமார் (வயது 12), இச்சிறுவனை பெற்றோர் கண்டித்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவன் அகப்படவில்லை.

இதற்கிடையில் திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றித்திரிந்த இச்சிறுவன், ஏற்காடு ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உள்ள நிழற்கூடத்தில் நேற்று இரவு உறங்கியுள்ளான்.

அவனை கண்ட ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ரகு, அவனை விசாரித்து, கூத்துமுத்தல் கிராமத்திற்கு அவனை அழைத்து சென்றார். அவனது பெற்றோர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததால், அச்சிறுவனை அவது பாட்டி செல்வியிடம் ஒப்படைத்தார்.

நே.நவீன் குமார்.

Leave a Reply