ஏற்காடு வனப்பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு!-போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சதாசிவம் (வயது70), இவர் கடந்த ஆகஸ்ட் 23 – ந்தேதி முதல் காணாமல் போயுள்ளார். இது குறித்து கண்ணங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சதாசிவத்தின் உறவினர்கள், நேற்று ஏற்காடு மலையடிவார வனப்பகுதியில் சதாசிவத்தைதேடியுள்ளனர். அப்போது, அடிவாரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகூடுகள் கிடப்பதை கண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று எலும்பு கூடுகளையும், இறந்த நபர் அணிந்திருந்த கைலி, துண்டு, சட்டை உள்ளிட்டவைகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply