மகாளய அம்மாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வழிபாடு நடத்தத் தடை!-காவல்துறை பலத்த பாதுகாப்பு.

இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், இன்று (16.09.2020) மாலை 07;05-மணிக்கு எடுக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மகாளய அம்மாவாசையை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பெருந்திரளாக கூடி வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில், இன்று (16.09.2020) மாலை முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மற்றும் அம்மா மண்டபம் பகுதி முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நமது பித்துருக்களுக்கு வழிபாடு நடத்துவது பாதுக்காப்பானது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply