வடமாநில தம்பதி படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த, ஜார்கன்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (வயது 41) மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (வயது 36) ஆகியோர் கடந்த 29 அன்று அவர்கள் குடியிருந்த வீட்டிற்குள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

முச்சிரே கெர்கெட்டா.

சுக்ராம்.

ராம்சநாக்.

இந்த கொலை வழக்கில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சிரே கெர்கெட்டா (வயது 25), சுக்ராம் (வயது 21), ராம்சநாக் (வயது 39) ஆகிய மூவரையும், ஏற்காடு போலீசார் நேற்று கைது செய்து, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும், க்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள புத்ராம் மற்றும் ஹைரா புத்ரே ஆகியோரை ஏற்காடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply