கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த வாலிபர்!- வடமாநில இளைஞர்கள் நடத்தும் மர்ம கொலைகள்…!-விழி பிதுங்கும் ஏற்காடு காவல்துறையினர்…!

சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் பணியாற்றி வந்த, ஜார்கன்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (வயது 41) மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (வயது 36) ஆகியோர் கடந்த 29 அன்று அவர்கள் குடியிருந்த வீட்டிற்குள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

முச்சிரே கெர்கெட்டா.

சுக்ராம்.

ராம்சநாக்.

இந்த கொலை வழக்கில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும் முச்சிரே கெர்கெட்டா (வயது 25), சுக்ராம் (வயது 21), ராம்சநாக் (வயது 39) ஆகிய மூவரையும், ஏற்காடு போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும், இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள புத்ராம் மற்றும் ஹைரா போத்ரே ஆகியோரை ஏற்காடு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே கணவன், மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரே என்ற இளைஞர், அதே எஸ்டேட்டில் கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் ஏற்காடு காவல்துறையினரால் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அருகில் கத்தி ஒன்றும் கிடந்துள்ளது.

தொடர்ந்து வடமாநில இளைஞர்கள் நடத்தும் மர்ம கொலையால், ஏற்காடு காவல்துறையினர் விழி பிதுங்கி போய் உள்ளனர்.

நே.நவீன் குமார்.

Leave a Reply